Vijay Sethupathi: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக  டப்பிங் தொடங்கிய விஜய் சேதுபதி. 

Vijay Sethupathi

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என்று பல மொழிகளில் மிக பிஸி நடிகராக இருந்து வருபவர். தனது நடிப்பு திறமையால் வில்லனாக, ஹீரோவாக, தந்தையாக, வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளர்.

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். அதோடு என்ன சிவாரிஸ்யம் என்றால்  நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்திருப்பது பற்றி ஒரு அப்டேட்டை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா இந்த படத்திற்கு டப்பிங் பேசி தொடங்கி வைத்ததாக புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் அப்டேட் வெளியிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் கண்டிப்பாக இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

முதல் முதலாக நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

 



கருத்துரையிடுக

புதியது பழையவை